True or Fake?

Tuesday 10 May 2016

Press Statement

National MIC Information

கோலசிலாங்கூர், மே 10- கோலசிலாங்கூர், ஈஜோக்கிலுள்ள கம்போங் ஶ்ரீஅமானில் இந்தியர்களுக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட வீடுகளை போலீஸ் உதவியுடன் சிலாங்கூர் மாநில அரசு அதிகாரிகள் உடைத்தபோது கடும் பதட்டம் ஏற்பட்டு அமளியில் முடிந்தது.

வீடுகள் உடைக்கப்படாமல் தடுக்கும் முற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் கே.பார்த்திபன், மஇகா இளைஞர் பிரிவுச் செயலாளர் அரவின் கிருஷ்ணன், சிலாங்கூர் ம இகா இளைஞர் தலைவர் கஜேந்திரன், இளைஞர் பிரிவைச் சேர்ந்த ரூபன், சசிதரன் ஆகியோர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட பின்னர் கூடுதலான இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வீடுகளை உடைக்கும் பணிகள் தொடர்கின்றன. இங்கு இருந்த மூன்று கோவில்களும் உடைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் ஐவர் இந்த வீடு உடைப்பில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment