True or Fake?

Friday 13 May 2016

ஆன்மிகமும் அறிவியலும்...



ஆடி மாதம் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா ? ஆடி மாதம் பிறக்கும் காலமானது கோடை காலத்துக்கும் மழை காலத்துக்கும் இடையில் தொடங்குகிறது. இந்த காலத்தில் உஷ்னம் அதிகமாக இருக்கும் , ஆடி மாத காற்றோடு  பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் காற்றில் அதிகம் பரவும் . இதனால் அம்மை போன்ற நோய்கள் வேகமாக பரவுகிறது . இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் , நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சரியான தடுப்பு மருந்து வெங்காயமும் மோரும் கலந்த கேழ்வரகு கூழ் தான்  என்று ஆராய்ந்து உணர்ந்த நம் முன்னோர் , மக்கள் அனைவரையும் கூழ் குடிக்க வைக்க , ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றி பிராசதமாக கூழை கொடுத்து வந்தனர். இந்த வழக்கம் தான் இன்றைக்கும் தொடர்கிறது .ஆடி மாதம் கூழ் ஊற்றும் வழக்கம் மட்டும் இல்லை என்றால் , ஓர் மருந்தான உணவை நாம் மறந்திருப்போம் நம் முன்னோர் அறிவியல் ஆற்றல் மட்டுமல்லாமல் அதை ஆன்மிகம் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லும் பக்குவத்தையும் அறிந்திருந்தனர் , என்பது இது போன்ற சான்றுகளால் தெரியவருகிறது.

No comments:

Post a Comment