True or Fake?

Tuesday 11 April 2017

இது நமது சமுதாயம், நம் கடமை

வணக்கம்,

நேற்று, அம்பார் தெனாங் தோட்ட வாழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தகவல் ஊடகங்கள் வழி தெரிவிக்க சிறப்பு கூட்டம் ஒன்று நடத்தினர்.

சமீபத்தில் தோட்ட நிறுவனம் அங்கு புது மனை கட்டிட வேலைகளின் காரணமாக அத்தேட்டத்தமிழ்ப்பள்ளி விளையாட்டு திடல் இழக்கும் சூழ்நிலையில் இருக்கின்றது.

சிப்பாங் ம.இ.கா தொகுதி தலைவர் மற்றும் தேசிய ம.இ.கா உச்சமன்ற உறுப்பினர் திரு குணா அவர்களின் அழைப்பை ஏற்று, ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் விளக்கங்கள் எடுத்துரைக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

அம்பார் தெனாங் பாட்டாளி மக்களின் போராட்டம் ஒரு நியாயமானது. அவர்களின் முயற்சிகளுக்கு கண்டிப்பாக உறுதுணையாய் இருப்பேன்.

இது நமது சமுதாயம், நம் கடமை

தினாளன் ராஜகோபாலு.


No comments:

Post a Comment