True or Fake?

Wednesday 1 March 2017

பழகுவதில் எளிமையும் சேவையில் நிறைவும் கொண்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற மகத்தான தலைவராய் டத்தோ சரவணன் திகழ்கிறார்

பழகுவதில் எளிமையும் சேவையில் நிறைவும் கொண்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற மகத்தான தலைவராய் டத்தோ சரவணன் திகழ்கிறார்.


 தாப்பா – பழகுவதில் எளிமையையும் சேவையில் மன நிறைவையும் அளிக்கும் மக்களின் நம்பிக்கையை பெற்ற மகத்தான தலைவராய் டத்தோ மு.சரவணன் திகழ்வதாக தாப்பா வாழ் இந்தியர்கள் டத்தோ சரவணனுக்கு புகழாரம் சூட்டினார்கள்.தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான டத்தோ மு.சரவணன் தனது சேவையாலும் தனித்துவ செயல்பாடுகளாலும் தொகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை பெற்ற தலைவராய் உயிர்ப்பித்திருக்கிறார்.

தாப்பா தொகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முறையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ சரவணன் 2013ஆம் ஆண்டில் பெரும் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.அவரது அந்த வெற்றிக்கு அவரது சேவையும் அவரது எளிமையான பழகும் தன்மையும்தான் பெரும் காரணியம் என கூறும் இங்குள்ள மக்கள் டத்தோ சரவணின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளும் அவரது சேவையும் தாப்பா தொகுதியில் இந்தியர்களின் தனித்துவ அடையாளமாக விளங்குவதாகவும் தாப்பா வாழ் இந்தியர்கள் தெரிவித்தனர்.
   தாப்பா தொகுதியில் இந்தியர்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியர்களின் தனித்துவ அடையாளமாய் திகழ்வதற்கு இந்திய சமுதாயத்திற்கான அழகிய மண்டபங்களை டத்தோ சரவணன் உருவாக்கியிருப்பதாகவும் இந்நிலை நாட்டில் வேறு எங்கும் காண முடியாது வரலாறு என்றும் பொது மக்கள் பெருமிதமாய் கருத்துரைக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி,டத்தோ சரவணனின் வருகை தாப்பா தொகுதிக்கு உட்பட தமிழ்ப்பள்ளிகள் புதியதொரு தோற்றத்துடன் மாபெரும் கல்வி பயணத்தை தொடங்கியிருப்பதாகவும் வட்டார தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பெருமிதம் கொள்கிறார்கள்.ஆண்டுதோரும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்திடும் டத்தோ சரவணன் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் அதன் தனித்துவ வளர்ச்சியிலும் பெரும் கவனம் செலுத்தி அதற்கான உதவிகளை நன் முறையில் செய்து வருவது தமிழ் சார்ந்த நெஞ்சங்களிடம் அவர் பெரும் நம்பிக்கை பெற்ற தலைவராய் தலைவராய் உலா வருகிறார்.
   இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் தாப்பாவில் கடந்தக்காலங்களை காட்டிலும் டத்தோ சரவணனின் வருகைக்கு பின்னர் தமிழ் மணக்கும் நகராய் மணம் வீசுகிறது என கூறும் வட்டார தமிழ் ஆர்வாலர்களும் சமூக இயக்கங்களும் டத்தோ சரவணனின் செயல்பாடுகளையும் அவரது தமிழ் சார்ந்த பணிகளையும் வெகுவாக பாராட்டுகிறார்கள்.
    இதற்கிடையில் அரசியல் ரீதியில் தாப்பா தொகுதி ம இ காவிற்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோ சரவணன் விளங்குவதாக தொகுதி ம இ காவினர் கருத்துரைக்கும் வேளையில் தொகுதி ம இ காவின் செயல்பாட்டிற்காக புதிய கட்டடத்தையும் அவர் எழுப்பி வருவது தொகுதி ம இ காவின் மற்றொரு அரசியல் உருமாற்றம் எனவும் அவர் தெரிவித்தனர்.
    தொகுதி பொருப்பாளர்கள் உட்பட தொகுதி கிளைத்தலைவர்கள்,மகளிர் பிரிவு மற்றும் இளைஞர் பிரிவின் மத்தியில் தனக்கான நட்பினை ஆழமாய் பதிவு செய்திருக்கும் டத்தோ சரவணன் அவர்களோடு அணுக்கமான நல்லுறவையும் கொண்டிருப்பது தொகுதி ம இ காவின் செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி இத்தொகுதியில் ம இ கா தொடர்ந்து ஆளுமையாய் இருக்கவும் வழிகோலுவதும் குறிப்பிடத்தக்கது.
    தாப்பா தொகுதியை பொருத்தமட்டில் டத்தோ மு.சரவணனை தங்கள் வீட்டுப்பிள்ளையாகவே இங்குள்ள ஒவ்வொரு இந்தியர்களும் கருதுகிறார்கள்.குறிப்பாக வயது கடந்தவர்கள் டத்தோ சரவணனின் முகத்தை பார்க்கையில் பெரும் நம்பிக்கையோடு அவர்களின் முகத்தில் புன்னகை உயிர்ப்பிப்பதையும் வெகுவாக காணவே முடிகிறது.அஃது அவர் மீது அந்த வயது கடந்தவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கயை காட்டுவதை உணர முடிகிறது.
   நடப்பில் தாப்பா தொகுதி மீது ம இ காவை சார்ந்த சிலர் குறி வைத்திருந்தாலும் இங்குள்ள மக்களின் மனங்களில் டத்தோ சரவணன் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள் என்பது இயல்பியல் உண்மை.மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்று மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கும் டத்தோ சரவணன் தாப்பா தொகுதி மக்களின் அடையாளமாகவும் ம இ காவின் பெரும் அடையாளமாகவும் இத்தொகுதியில் தனக்கான தனித்துவ ஆளுமையோடு தனது மக்கள் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
   ஜாலான் தெலுக் இந்தானில் அமைந்துள்ள பனோப்டேன் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்திய சமுதாயத்துடனான சந்திப்பு நிகழ்வின் போது மக்கள் மனங்களில் மேற்கண்டவாறு கருத்துக்கள் உள்ளன்போடு வெளிப்பட்டத்தை உணர முடிந்தது.இதில் உரையாற்றிய டத்தோ சரவணன் மக்களின் சேவையும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதும்தான் தனது முதன்மை இலக்கு என்றார்.
   மக்களால் தேர்வு செய்யப்பட்ட தாம் மக்களுக்கு சேவை செய்வதையே பெரும் பாக்கியமாய் கருதுவதாகவும் இந்திய சமுதாயத்தின் பிரச்னையை முற்றாக தீர்ப்பதே தனது தனித்துவ இலக்கு என்றும் தாப்பா தொகுதி இந்தியர்கள் நாட்டில் தனித்துவ அடையாளத்துடன் மிளிருவதே தனது மாபெரும் நோக்கம் என்றும் கூறினார்.மக்களின் சேவகன் நான் என்னிடம் உங்களுடைய பிரச்னையை கொண்டு வாருங்கள் அதற்கான நன் தீர்வு எப்போதும் எம்மிடத்தில் கிடைக்கும் என்றும் டத்தோ சரவணன் உறுதி அளித்தார்.
   இதற்கிடையில்,டத்தோ சரவணனின் வருகை தாப்பா தொகுதி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைத்திருப்பதாகவும் தொகுதி ம இ காவின் செயல்பாடுகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வரும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தொடர்ந்து இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்க வேண்டும் என்றும் தொகுதி காங்கிரஸ் தலைவர் டத்தோ டாக்டர் மு.மாலசிங்கம் நினைவுக்கூர்ந்தார்.
    தாப்பா தொகுதியை பொருத்தமட்டில் இந்திய சமுதாயத்திடம் பெரும் நம்பிக்கையை பெற்றிருக்கும் டத்தோ சரவணன் பிற இனத்தவர்களிடமும் தனக்கான தனித்துவ அடையாளத்தோடு மிளிருவதோடு மட்டுமின்றி தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகள் மத்தியிலும் நம்பிக்கை பெற்ற தலைவராகவும் மக்கள் பிரதிநிதியாகவும் திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment